20.7 C
கோட்டக்குப்பம்
February 4, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் குடியுரிமை சட்டத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

குடியுரிமை சட்டத்தை அமல்படுத்திய பா.ஜ.க அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோட்டக்குப்பத்தில் இன்று(15/03/2024) கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியதன் மூலம் மதச்சார்பின்மையைச் சிதைக்கும், மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும், இசுலாமியர்களுக்கு எதிரான வெறுப்பைத் தீவிரப்படுத்தும் அரசியல் ஆதாயம் தேடும் பாஜக அரசைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன்படி, கோட்டக்குப்பம் நகராட்சி எதிரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை ரவிக்குமார் எம்.பி. அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 75-வது சுதந்திர தின பவள விழா.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் 18-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் இரவு நேர ரோந்துப்பணி தொடர்பாக காவல் ஆய்வாளர் அவர்களிடம் கவுன்சிலர் மனு.

டைம்ஸ் குழு

Leave a Comment