May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதை சைடு வாய்க்கால் விரைவில் சரி செய்ய அதிகாரிகள் ஒப்புதல்.

கோட்டக்குப்பம் பழைய பட்டினம் பாதையில் உள்ள சைடு வாய்க்கால்களை கோட்டக்குப்பம் பேரூராட்சி சார்பில் தூர் வாருவதற்காக, மேலே போடப்பட்டிருந்த சிமென்ட் சிலாப்புகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

சுத்தம் செய்யப்பட்ட வாய்க்கால்களை, மீண்டும் மூடாமல் அப்படியே திறந்து விட்ட காரணத்தால் கடந்த சில திங்களாக பல விபத்துக்களும் ஏற்பட்டுள்ளது.

நேற்று இது சம்பந்தமாக இணையதளத்திலும் மற்றும் முகநூல் பக்கங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதை அறிந்த திமுக விழுப்புரம் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஜெயமூர்த்தி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அப்துல் சமது ஆகியோர், இன்று காலை பார்வையிட்டு உடணடி நடவடிக்கை எடுக்க கோட்டக்குப்பம் செயல் அலுவலரிடம் பேசி சம்மந்தப்பட்ட பொரியாளருடன் கலந்து ஆலோசித்தனர்.

இது சம்மதமாக அதிகாரிகள் நாளை முதற்கட்டமாக பட்டினத்தார் தெரு மற்றும் மரைக்காயர் தெரு 1 ஆகிய தெருக்களுக்கு செல்லும் பாதையை சரிசெய்யபடும் எனவும், மேலும் மற்ற பகுதிகளில் விரைவில் சரிசெய்யபடும் என்றும் அதுவரை மணல்மூட்டை கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தனர்.

இவர்களுடன் கோட்டக்குப்பம் டைம்ஸ் குழு, மீடியா சாதிக், அஸ்கர் அலி மற்றும் முகமது இப்ராஹிம் அவர்கள் உடன் இருந்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலைக்கான போட்டி தேர்வு பயிற்சிக்கு நேர்காணல். இளைஞர்களே, வாய்ப்பினை தவறவிடாதீர்கள்!

டைம்ஸ் குழு

குவைத் வாழ் கோட்டகுப்பத்தினர் பெருநாள் சந்திப்பு (புகைப்படங்கள்)

டைம்ஸ் குழு

போதை பொருள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை

டைம்ஸ் குழு

Leave a Comment