23.4 C
கோட்டக்குப்பம்
December 17, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் உள்ளாட்சித் தேர்தல்: வாக்குப் பதிவு நிறைவு. எந்தத்த வார்டில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு. முழு விபரம்.

தமிழ்நாட்டில் காலை 7 மணிக்குத் தொடங்கிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று (சனிக்கிழமை) ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது.

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. 5 மணி முதல் 6 மணி வரை கரோனா நோயாளிகள் வாக்களித்தனர்.

வாக்குப் பதிவு நிறைவடைந்ததையடுத்து, வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்படும் பணிகள் முடிவடைந்தது.

கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை 76 சதவீத வாக்குகள்  பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக வார்டு 23-ல் 90 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. அதன் முழு விபரம் பின்வருமாறு,

வாக்கு எண்ணிக்கை 22-ம் தேதி நடைபெறுகிறது. உள்ளாட்சி அமைப்புகளின் புதிய உறுப்பினர்கள் மார்ச் 2-ம் தேதி பதவியேற்கின்றனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கல்யாணராமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி கோட்டகுப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!

கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

கோட்டக்குப்பம் ஷாதி மஹாலில் தொடங்கியது மாபெரும் இஸ்லாமிய கண்காட்சி: கவனத்தை ஈர்க்கும் மாணவிகளின் ஆக்கங்கள்

டைம்ஸ் குழு

Leave a Comment