May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம்.

கோட்டக்குப்பதில் இன்று 05.01.2022, மாலை 5:00 மணிக்கு, மனோன்மணி திருமண மண்டபத்தில் கோட்டக்குப்பம காவல் ஆய்வாளர் திரு. ராபின்சன் அவர்கள் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ECR ரோட்டில் அமைந்துள்ள கடற்கரை கிராமத்தை சேர்ந்த முக்கியஸ்தர்களிடம் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை குறித்து காவல் ஆய்வாளர் எடுத்துரைத்தார்.

  1. அனைவரும் முககவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.
  2. பொது இடங்களில் முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும்.
  3. பொது இடங்களில் முககவசம் அணியாதவர்கள் அபராதம் செலுத்த வேண்டும்.
  4. வழிபாட்டு தலங்களில் அனுமதியில்லாத நாட்களில் வழிபாடு நடத்த கூடாது.
  5. தற்போது கால்நடைகளால் சாலைகளில் விபத்து ஏற்பட்டு வருகிறது. கால்நடைகளை வளர்ப்பவர்கள் அவர்களுடைய கால்நடைகள் சாலைகளில் திரிய அனுமதிக்க கூடாது. மேலும், சாலைகளில் கால்நடைகளை விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
  6. தமிழக அரசு லாக்டவுண் அறிவிப்பை மீறாமல் கடைபிடிக்க வேண்டும்.
  7. வாகனங்களில் வருபவர்கள் ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டினால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்.

என்று காவல் ஆய்வாளர் கூட்டத்தில் எடுத்துரைத்தார்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணி சிறப்பு முகாம்கள், நவம்பா் 12,13, 26, 27 தேதிகளில் நடக்கிறது.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் நாளை 7-வது மெகா தடுப்பூசி முகாம்!

டைம்ஸ் குழு

பரக்கத் நகரில் சிறப்பாக கொண்டாடப்பட்ட 74-வது சுதந்திர தினம்.

Leave a Comment