26.2 C
கோட்டக்குப்பம்
December 16, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் உலக இரத்ததான கொடையாளர்கள் தின நிகழ்ச்சி நடைபெற்றது.

14 ஜூன்2020., #கோட்டக்குப்பத்தில் “இரத்ததான கொடையாளர்கள் பாராட்டு நிகழ்ச்சி” உலக ரத்ததான கொடையாளர்கள் தினமான இன்று கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சமூக இடைவெளி கடைப்பிடித்து நடைபெற்றது.உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் ஜூன் 14-ஆம் தேதி இரத்த தானத்தை ஊக்குவிக்கும் பொருட்டு உலக ரத்ததான தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.

இந்நிகழ்ச்சியில் வானூர் வட்ட சுகாதாரத்துறை மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெயபிரகாஷ் அவர்கள் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்குவது குறித்து விளக்கம் அளித்தார். விழுப்புரம் மாவட்ட பேரிடர் மேலாண்மை திட்ட அலுவலர் வாசுதேவன் அவர்கள் மற்றும் கோட்டக்குப்பம் சுகாதார ஆய்வாளர் ரவி அவர்கள் கடந்த ஆண்டு தன்னார்வ இரத்ததான கொடையாளர்களுக்கு மற்றும் மருத்துவ சேவை செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலச் சங்க நிர்வாகிகள் சபீர், சாதிக், காதர்,பாருக், யாசின், ஷரஃபுதீன் மற்றும் சமூக சேவர்கள் அப்துல் ரஷீத், பயாஸ் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இப்படிக்கு,
இரத்ததானம் மற்றும் மருத்துவ சேவைப் பிரிவு
கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொது நலச் சங்கம்
கோட்டக்குப்பம் – 605104

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் உள்ள அங்கன்வாடி பெயர் பலகை எரிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.

டைம்ஸ் குழு

நாளை ஈத்காவில் பரகத் நகர் பள்ளிவாசல் மதரஸா கட்டுமான பணிக்காக பொது வசூல்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட 10, +1, +2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு & பாராட்டுச் சான்றிதழ்.

டைம்ஸ் குழு

Leave a Comment