இஸ்லாம் Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Sat, 11 Jul 2015 07:03:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg இஸ்லாம் Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 எது உலக அதிசயம்??? https://www.kottakuppamtimes.com/81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%258e%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%2589%25e0%25ae%25b2%25e0%25ae%2595-%25e0%25ae%2585%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%259a%25e0%25ae%25af%25e0%25ae%25ae%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/81/#respond Sat, 11 Jul 2015 07:03:10 +0000 http://www.kottakuppamtimes.com/?p=81 [dropcap] எ [/dropcap] து உலக அதிசயம்??? உலகின் புதிய ஏழு அதிசயமாக அறிவிக்கப்பட்டவற்றின் பட்டியல்: 1. இந்தியாவின் தாஜ்மஹால். 2. சீனப் பெருஞ்சுவர். 3. ஜோர்டானின் பெட்ரா. 4. பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் மலை உச்சியில் உள்ள பிரமாண்ட இயேசு நாதர் சிலை. 5. பெருவின் மச்சு பிச்சு. 6. மெக்ஸிகோவின் மாயன் கட்டிடங்கள். 7. ரோம் நகரின் கொலீசியம். நாமாகவே உருவாக்கியதும், அடிக்கடி மாற்றி...

The post எது உலக அதிசயம்??? appeared first on Kottakuppam Times.]]>
[dropcap] எ [/dropcap] து உலக அதிசயம்???

உலகின் புதிய ஏழு அதிசயமாக அறிவிக்கப்பட்டவற்றின் பட்டியல்:

1. இந்தியாவின் தாஜ்மஹால்.
2. சீனப் பெருஞ்சுவர்.
3. ஜோர்டானின் பெட்ரா.
4. பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் மலை உச்சியில் உள்ள பிரமாண்ட இயேசு நாதர் சிலை.
5. பெருவின் மச்சு பிச்சு.
6. மெக்ஸிகோவின் மாயன் கட்டிடங்கள்.
7. ரோம் நகரின் கொலீசியம்.

நாமாகவே உருவாக்கியதும், அடிக்கடி மாற்றி கொள்கிறவைதான் அதிசயமா?

ஜம் ஜம் (ZAM ZAM water) நீரின் அற்புதத் தன்மை; அதிர்ச்சியில் விஞ்ஞானிகள். 5 ஆயிரம் வருட பாரம்பரியம் கொண்ட இக்கிணற்று நீரை, உலகில் வாழும் பெரும்பாலான முஸ்லிம்கள் அருந்தாமல் இருந்திருக்க மாட்டார்கள். மக்காவிற்கு உலகின் பல தேசங்களில் இருந்து புனித பயணம் வரும் முஸ்லிம்கள் இந்த கிணற்று நீரை குறைந்தது 20 லிட்டராவது தனது நாட்டிற்கு எடுத்து கொண்டு செல்லாமல் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட அற்புதமான இந்த ஜம் ஜம் கிணற்றை பற்றி காண்போம்.

‘ஜம் ஜம்’ என்றால் நில் நில் என்றும் அதிகம் என்று அர்த்தம். சென்ற நூற்றாண்டில், ஒரு முறை ஜரோப்பிய மருத்துவர்கள், சுகாதாரத்திற்காக இந்தகிணற்றினை சுத்தப்படுத்த வேண்டும் என்று சவுதி அரசுக்கு ஆலோசனை கூறினர்.

இதை ஏற்றுக்கொண்ட சவுதி அரசு 8 அதி நவீன ராட்சத பம்பு செட்டுளை கொண்டு தொடர்ந்து இரவும் பகலுமாக 15 நாட்கள் இந்த நீரை இறைத்தது. ஆனால் நீரின் அளவு குறையவில்லை. மாறாக நீரின் மட்டம் ஒரு அங்குலம் உயர்ந்து இருந்தது. ஒரு வினாடிக்கு சுமார் 8000 லிட்டர் என்ற அளவில், தினமும் 691.2 மில்லியன் லிட்டர் தண்ணீரை இடவேளையின்றி ராட்சத மோட்டார்கள் மூலம் இந்த கிணற்றிலிருந்து உறிஞ்சப்படுகிறது.
நல்ல நீர் வளம் உள்ள ஒரு பெரிய கிணற்றில் ஒரு வருடம் எடுக்கும் அளவு நீரை, ஒரே நாளில் ‘ஜம் ஜம்’ கிணற்றிலிருந்து எடுக்கபடுவது மிகப்பெரிய அதிசயம், அதை விட அதிசயம் 691.2 மில்லியன் நீரை தினமும் எடுத்தபோதும் இதன் அளவு குறைவதில்லை. சுவையும் மாறியதில்லை.

ஹஜ் காலத்திலும் ரமலான் மாதத்திலும் சுமார் 20லட்சம் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். அனைவருக்கும் இந்தக் கிணற்றில் இருந்து தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. குறைந்த ஆளம் உள்ள இந்தக் கிணறு, பாலைவனத்தில் அமந்துள்ளது, அருகில் ஏரிகளோ கண்மாய்களோ குளம் குட்டைகளோ இல்லாத அந்தக் கிணற்றில் இருந்து எப்படி லட்சோப லட்சம் மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது என்பது முதலாவது அற்புதமாகும். எந்த ஊற்றாக இருந்தாலும் சில/பல வருடங்களிலோ செயலிழந்து போய் விடும்.

ஆனால் இந்த ஊற்று பல ஆயிரம் ஆண்டுகளாக வற்றாமல் இருப்பது இரண்டாவது அற்புதமாகும். ஜம் ஜம் கிண்று அருகே எந்த தாவரமும் வளருவதில்லை. எந்த ஒரு நீர் நிலையாக இருந்தாலும் பாசி படிந்து போவதும் கிருமிகள் உற்பத்தியவதும் இயற்கை.

இதனால் தான் குளோரின் போன்ற மருந்துகள் நீர் நிலைகளில் கலக்கப்படுகின்றன. ஆனால் ஜம்ஜம் தண்ணீரில் அது உற்பத்தியான காலம் முதல் இன்று வரை எந்த மருந்துகள் மூலமும் அது பாதுக்காக்கப்படாமல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வது மூன்றாவது அற்புதமாகும். மருந்துகளால் பாதுகாக்கப்படாத தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்காது என்பது அறிவியலின் முடிவாகும்.

ஆனால் இந்தத் தண்ணீர் 1971-ம் ஆண்டு ஐரோப்பிய சோதனைச் சாலையில் சோதித்துப் பார்க்கப்பட்ட போது இது குடிப்பதற்கு மிகவும் ஏற்ற நீர் என்று நிருபிக்கப்பட்டது. பூமியிலுள்ள நீரில் மிகச்சிறந்தது ‘ஜம் ஜம்’ நீர் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள். பொதுவாக மற்ற நீரில் இருந்து ஜம்ஜம் தண்ணீர் வேறுபட்டுள்ளதும் சோதனையில் தெரிய வந்துள்ளது.

கால்ஷியம் மற்றும் மெக்னீஷியம் எனும் உப்பு மற்ற வகை தண்ணீரை விட ஜம்ஜம் தண்ணீரில் அதிகமாக உள்ளது. இந்த உப்புக்கள் புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியவை. இதை அனுபவத்தில் உணரலாம்.
மேலும் இந்தத் தண்ணீரில் ஃபுளோரைடு உள்ளது. இது கிருமிகளைஅழிக்க வல்லது. அங்கே அற்புதம் நடக்கிறது, இங்கே அற்புதம் நடக்கிறது என்றெல்லாம் பலவாறான நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது. அது போல் இதையும் கருதக்கூடாது.

மற்ற அற்புதங்கள் எல்லாம் எந்த சோதனைக்கும் உட்படுத்தப்படாதவை, நிருபிக்கப்படாத நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் தினசரி 20 லட்சம் மக்களுக்கு அந்தத் தண்ணீர் குடி நீராகப் பயன்படுவதும், பாலைவனத்தில் இந்த அதிசயம் பல்லாயிரம் ஆண்டுகளாக நடந்து வருவதும் எல்லாவித சோதனைக்கும் உட்படுத்தப்பட்ட நிரூபிக்கப்பட்டும் உள்ளதால் இது மெய்யான அற்புதமாகும்.

இது போன்ற அற்புதம் உலகில் இது ஒன்றுதான் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. குறிப்பு; மற்ற தண்ணீர் பிடித்து வைத்தால் சில நாள்களில் கிருமிகள் தென்படும். ஆனால் அல்லாஹ்வின் அற்புதத்தால் கிடைத்த ஜம்ஜம் தண்ணீர் எத்தனை வருடம் பிடித்து வைத்தாலூம் கெடுவதில்லை இதுவும் ஓர் அதிசியம்தான்……….

பகிர்ந்து கொள்க என்று சொல்ல தேவை இல்லை. நல்ல விசயத்தை பகிர்ந்து கொள்வது ஒவ்வொருவருக்கும கடமை .

The post எது உலக அதிசயம்??? appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/81/feed/ 0
சவால் விடுகிறேன்.இதை படித்துவிட்டு அழுதே தீருவீர்….உளம் தொடும் ஒரு கதை https://www.kottakuppamtimes.com/38/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25af%2587%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25a4%25e0%25af%2588-%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25ae%25bf https://www.kottakuppamtimes.com/38/#respond Thu, 02 Jul 2015 12:47:49 +0000 http://kottakuppamtimes.com/?p=38 இஷாவின் அதானுக்கு 15 நிமிடங்களே மிஞ்சியிருந்தன. நான் அவசர அவசரமாக வுழூ செய்து மஹ்ரிப் தொழுதேன். தொழுது முடிந்த பின் எனக்கு ஏனோ உம்மும்மாவின் ஞாபகம் வந்தது.என் தொழுகையை எண்ணி வெட்கமாக இருந்தது. உம்மும்மா தொழும் போது நீண்ட நேரமெடுத்து அமைதியாகத்தொழுவார்.சுஜூதில் தலை வைத்தேன் அப்படியே கொஞ்ச நேரம் இருந்தேன் நாள் முழுதும் வேலை,மிக மிக களைப்பாக இருந்தேன். திடீரென இடி முழக்கம் போலொரு சப்தம்.திடுக்கிட்டெழுந்தேன். இது என்ன? வியர்த்து...

The post சவால் விடுகிறேன்.இதை படித்துவிட்டு அழுதே தீருவீர்….உளம் தொடும் ஒரு கதை appeared first on Kottakuppam Times.]]>
இஷாவின் அதானுக்கு 15 நிமிடங்களே மிஞ்சியிருந்தன.
நான் அவசர அவசரமாக வுழூ செய்து மஹ்ரிப் தொழுதேன். தொழுது முடிந்த பின் எனக்கு ஏனோ உம்மும்மாவின் ஞாபகம் வந்தது.என் தொழுகையை எண்ணி வெட்கமாக இருந்தது.
உம்மும்மா தொழும் போது நீண்ட நேரமெடுத்து அமைதியாகத்தொழுவார்.சுஜூதில் தலை வைத்தேன் அப்படியே கொஞ்ச நேரம் இருந்தேன்
நாள் முழுதும் வேலை,மிக மிக களைப்பாக இருந்தேன்.
திடீரென இடி முழக்கம் போலொரு சப்தம்.திடுக்கிட்டெழுந்தேன்.
இது என்ன? வியர்த்து வியர்த்துக் கொட்டுகிறது.
எல்லாப்பக்கம் சன சமுத்திரம்.
நான் எங்கே நிற்கிறேன்.சிலர் ஓரிடத்தில் விறைத்து நிற்கிறார்கள்.சிலர் அங்கும் இங்கும் ஓடித்திரிகிறார்கள்.
சிலர் முழங்காலில் முகம் புதைத்து அழுது கொண்டிருக்கிறார்கள்.
பயம் என்னைப் பிய்த்துத் தின்னத்துவங்கியது.நான் எங்கிருக்கிறேன் என்பதை சர்வ நிச்சயமாய் உணர்ந்து கொள்கிறேன்.இதயம் நெஞ்சாங்கூட்டிலிருந்து எகிறி வெளியேறத்துடிக்கிறது.
இது இறுதித்தீர்ப்பு நாள்.
நான் உலகத்தில் இருந்த போது இந்த நாளைப்பற்றி எவ்வளவெல்லாம் கேட்டிருப்பேன்,வாசித்திருப்பேன்.ஆனால் இவ்வளவு சீக்கிரமாக இந்த நாள் வரும் என்று நினைக்கவில்லையே!!!
ஒரு வேளை இதெல்லாம் வெறும் பிரமையோ?
இல்லை,இல்லை இதெல்லாம் நிஜமாகவே இருக்கிறது.இந்தப் பயம்…..இதுவரை நான் வாழ்நாளில் உணர்ந்ததில்லை.
எனது பெயரைக் கூப்பிட்டு விட்டார்களா என்று ஒருவர் இருவரிடம் பதட்டத்தோடு கேட்டபடி கூட்டத்தோடு நானும் நகர்கிறேன்.
திடீரென என் பெயர் அழைக்கப்படுகிறது.
ஆமாம்,என் பெயரே தான்.என் தந்தையின் பெயர் கூட சரியாக இருக்கிதே.
இந்த சனசமுத்திரம் அப்படியே பிளந்து எனக்கு வழிவிடுகிறது.
இரண்டு மலக்குகள் என் தோளிரண்டையும் பற்றுகிறார்கள்.சந்தேகம் நீங்காத கண்களோடு நடக்கிறேன்.
மலக்குகள் என்னை நடுவில் அமர்த்தி விட்டு நகர்கிறார்கள்.என் முழு வாழ்க்கையும் என் கண் முன்னே ஓடுகிறது ஒரு திரைப்படம் போல்.தலையைக்குனித்துக்கொள்கிறேன்.
திடீரென என் கண் முன்னே இன்னொரு உலகம் காட்டப்படுகிறது.அங்கு மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்கிறார்கள்.
எனது தந்தை ஒரு சமூக சேவையிலிருந்துஇன்னொன்றுக்கு ஓடிக்கொண்டிருக்கிறார்.அவரது செல்வம் அல்லாஹ்வுடைய பாதையில் செலவளிக்கப்படுகிறது.
எனது உம்மா வீட்டிற்கு வரும் ஏழைகளுக்கு அள்ளி வழங்குகிறார்.விருந்தாளிகளுக்கு உணவளிக்கிறார.
நான் கெஞ்சுகிறேன்.
நானும் அல்லாஹ்வுடையபாதையில் தான் இருந்தேன்.
மற்றவர்களுக்கு உதவினேன்.
அல்லாஹ்வுடைய தீனை மற்றவர்களுக்கு எத்தி வைத்தேன்.
எனது தொழுகைகளை நிறைவேற்றினேன்.
ரமழானில் நோன்பு நோற்றேன்.
அல்லாஹ் சொன்னவற்றைச் செய்தேன்.
வேண்டாம் என்று சொன்னவற்றிலிருந்து தவிர்ந்து கொண்டேன்.
நான் எவ்வளவு அல்லாஹ்வை நேசித்தேன் என்பதை நினைத்து நான் விம்மி விம்மி அழத்துவங்கினேன்.
நான் உலகில் எதைத் தான் செய்திருந்தாலும் அது மிகக்குறைவே என்பதை அந்த நிமிடம் உணர்ந்தேன்.அல்லாஹ்வைத்தவிர வேறு யாராலும் என்னைக் காப்பாற்ற முடியாது என்று உறுதியாக அறிந்து கொண்டேன்.
வியர்வை முன்னெப்போதும் இல்லாதளவு பெருகி வழிய நான் நடுநடுங்கினேன்.
கடைசித்தீர்ப்பை எதிர்நோக்கிய என் கண்கள் மீஸான் தராசில் நிலைகுத்தி நின்றன.
இதோ தீர்ப்பு.
நரகிற்கு செல்வோரின் பெயர்கள் வாசிக்கப்படுகின்றன.
இறைவா…….
என் பெயரும் வாசிக்கப்படுகிறது.
நான் முழங்காலில் விழுந்தேன்‘என்னால் முடியாது.இங்கே ஏதோ தவறு நடந்திருக்கிறது.நான் எப்படி நரகம் போக முடியும்” என்று கத்திக்கூச்சலிட்டேன்.தலை சுற்றியது.கண்களில் ஒளி மங்கியது.
மலக்குகள் இருவர் என்னை கொழுந்து விட்டெரியும் நரகிற்கு அழைத்துச் செல்கிறார்கள்.
என் கால்கள் கரடுமுரடான தரையில் இழுத்துச்செல்லப்படுகின்றன.
நான் சப்தமாக அழைக்கிறேன்.
“உதவுங்களே யாராவது”
எனது நற்செயல்களை அழைக்கிறேன்.ஓதிய குர் ஆனை,தொழுகைகளை அழைக்கிறேன்.
ரசூல் (ஸல்) அவர்களின் மணிமொழி ஞாபகத்துக்கு வருகிறது.ஐந்து முறை ஆற்றில் குளித்தால் உடம்பு சுத்தமடைவதைப்போல ஐவேளைத்தொழுகை பாவங்களை அழித்து விடுகிறது.
அழத்தொடங்கினேன்.
எங்கே என் தொழுகை?
எங்கே என் தொழுகை?
எங்கே என் தொழுகை?
மலக்குகள் நிற்கவில்லை;என் கதறலைக்காதில் போட்டுக்கொள்ளவுமில்லை.
நரகத்தின் சுவாலைகளின் வெப்பம் என் முகத்தை எரிக்கிறது.ஒரு முறை நம்பிக்கையின்றித் திரும்பிப்பார்க்கிறேன்.ஒரு மலக்கு என்னைப்பிடுத்து நெருப்புக் குண்டத்தில் தள்ளி விடுகிறார்.ஆவென்று கத்திக்கொண்டே நான் கீழே விழுகிறேன்.ஐந்தாறு அடிகள் விழுந்த பின் ஒரு கரம் என்னைப்பற்றி இழுக்கிறது.
தலையை உயர்த்திப்பார்க்கிறேன்.வெள்ளைத் தாடியுடன் ஒரு முதியவர்.
“நீங்கள் யார்?’
“நான் தான் உனது தொழுகை”
“ஏன் நீங்கள் இவ்வளவு தாமதித்து வந்தீர்கள்..இன்னும் கொஞ்ச நேரத்தில் நரகம் என்னை விழுங்கியிருக்குமே” ஆதங்கத்தோடு சொன்னேன்.
முதியவர் சிரித்தார்.”நீ எப்போதும் கடைசி ந
ேரத்தில் தான் நிறைவேற்றினாய்,மறந்து விட்டாயா?
ஒரு நொடி…
நான் விழித்துக்கொண்டேன்,சஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தினேன்.
என் தாயும் தந்தையும் உரையாடுவது கேட்கிறது.
என் உடை வியர்வையில் குளித்திருக்கிறது.
அல்லாஹு அக்பர்!
அல்லாஹு அக்பர்!
இஷாவிற்கான அதான். உடனே எழுந்து வுழூ செய்வதற்காகச் சென்றேன்.
காதல் 
பாடல்களைக் கேட்டு
மனதில்
காமத்தை
வளர்க்காதே !
��
திரைப்படங்களை
பார்த்து
தீமைகளை
செய்யாதே !
��
இறைவனை
மறந்து உலக
இன்பங்களுக்கு அடிமையாகாதே !
��
மரணம் உன்னை சுவைத்தேத் தீரும்
என்பதை மறக்காதே !
��ஆதமின் மகனே ! ஆடம்பர
வாழ்க்கையை
விரும்பாதே !
��
ஏனெனில்
நாளை நீ மண்ணறைக்குச் சொந்தமானவன்
என்பதை மறக்காதே !
��மனிதனே ! விதவிதமாக
உணவுகளை
உண்டாயே !
��
நாளை
மண்ணறைக்குள்
உன்
உடம்பை புழுக்கள்
உண்ணும்
என்பதை
நினைத்தாயா ?
��ஆதமின் மகனே ! உதவிகள்
செய்வதை
வெறுத்து
ஏழைகளை
விரட்டியடித்து
ஆணவமாக
உலகில் வாழாதே !
��
மரணம் உங்கள் முன்
என்பதை
மறக்காதீர்கள்.
��
பேரம் பேசி
பாவங்களை செய்யும்
மனிதனே !
படைத்தவன்
உன்னை பார்த்த
வண்ணமாக
இருக்கிறான்
என்பதை மறந்து
விடாதே !
��மனிதனே !
உன்னை இறைவன்
மரணத்திற்கும்,
மறுமைக்கும் ஏற்ப
படைத்துள்ளான்
என்பதை மறக்காதே !
����������������
என் அருமை
இஸ்லாமிய
நெஞ்சங்களே !
படித்த பின் இதை உங்களுடைய
நண்பர்களுடன்
பகிர்ந்துக்
கொள்ளுங்கள்
நல்லதை
செய்யுங்கள்…

24 Jun 2015

The post சவால் விடுகிறேன்.இதை படித்துவிட்டு அழுதே தீருவீர்….உளம் தொடும் ஒரு கதை appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/38/feed/ 0