அபுதாபி & கத்தார் நாட்டில் வசிக்கும் கோட்டக்குப்பம் நகர மக்கள், இன்று நோன்பு பெருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். அதிகாலையில் பள்ளிவாசல்களில் நடைபெற்ற பெருநாள் சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற அவர்கள், தொழுகைக்குப் பின் ஒருவரையொருவர் சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.






