இந்திய திருநாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று (ஜனவரி 26, 2026) நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளைப் போற்றும் வகையில், கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி சார்பில் தேசியக் கொடியேற்று விழா இன்று நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. இவ்விழாவில் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பேராசிரியர்கள் மற்றும் மதரசா மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். மேலும், சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களும் நிகழ்வில் பங்கேற்று குடியரசு தின விழாவைச் சிறப்பித்தனர்.




