20.7 C
கோட்டக்குப்பம்
February 4, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் தொடர் குப்பை எரிப்பால் பொதுமக்கள் அவதி: நகராட்சி அதிகாரிகள் மீது மனிதநேய மக்கள் கட்சி காவல் நிலையத்தில் புகார்!

கோட்டக்குப்பம் ஜமியத் நகர் பகுதியில் குப்பைகள் எரிக்கப்படுவதால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகள் குறித்து மனிதநேய மக்கள் கட்சி, கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் இன்று (11.07.2025) புகார் மனு ஒன்றை அளித்துள்ளது.

புகாரின் பின்னணி:

நேற்று (ஜூலை 10) இரவு ஜமியத் நகர், முதல் மெயின் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான காலி மனைகளில் நகராட்சியால் கொட்டப்பட்டிருந்த குப்பைக் கூளங்கள் தீவைத்து எரிக்கப்பட்டதால், அப்பகுதியைச் சுற்றிலும் புகை மண்டலம் சூழ்ந்தது. இதனால் மூச்சுத் திணறல் உள்ளிட்ட அவதிகளுக்கு உள்ளான அப்பகுதி மக்கள் மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகளை அணுகி முறையிட்டனர்.

கட்சியின் நடவடிக்கைகள்:

மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். இரவு 7:30 மணியளவில் தீ எரிந்து கொண்டிருந்ததையும், அதிலிருந்து அடர்த்தியான புகை வெளியேறியதையும் கண்டனர். உடனடியாக நகராட்சி மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தீயை அணைக்க கோரிக்கை விடுத்தனர். நீண்ட இழுபறிக்குப் பின்னர், நகராட்சி அலுவலர்களின் தாமதத்திற்குப் பிறகு, தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, இரவு 12 மணியளவில் தீயும், புகையும் கட்டுப்படுத்தப்பட்டது.

தொடரும் பிரச்சனை:

அப்பகுதி மக்கள் தெரிவித்ததன்படி, கடந்த நான்கு மாதங்களாக இதே இடத்தில் நகராட்சி அலுவலர்கள் குப்பைகளை கொட்டி மலை போல் குவித்து வருகின்றனர். மேலும், அவ்வப்போது அவற்றை எரியூட்டியும் வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட உடல் உபாதைகளும், நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளதாக கட்சி நிர்வாகிகள் சுட்டிக்காட்டினர்.

புகார் மனு:

இதன் அடிப்படையில், இன்று(11/07/2025) மதியம் சுமார் 2 மணியளவில், மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. மேற்படி பகுதியில் குப்பைகளைக் கொட்டியும், எரியூட்டியும் பொதுமக்களுக்கு பெரும் இடையூறையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி வரும் நகராட்சி ஆணையாளர், துப்புரவு ஆய்வாளர், துப்புரவு மேற்பார்வையாளர் மற்றும் துப்புரவு ஒப்பந்ததாரர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம்‌ நகராட்சிக்கான புதிய வார்டு மறுவரையறையில்‌ ஏற்ப்பட்டுள்ள குளறுப்படிகள்‌ குறித்து மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சி மனு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் நவீன தானியங்கி தெரு விளக்குகள் அமைப்பு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்கள்.

டைம்ஸ் குழு

Leave a Comment