குவைத் நாட்டில் வசிக்கும் கோட்டக்குப்பம் நகர மக்கள், இன்று(30/03/2025) நோன்பு பெருநாளை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடினர். அங்குள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. தொழுகைக்குப் பின், கோட்டக்குப்பம் மக்கள் ஒருவரையொருவர் சந்தித்து, தங்களது பெருநாள் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.











