May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் த.மு.மு.க நகர அலுவலகத்தில் குடியரசு தின விழா

இந்தியாவின் 75-வது குடியரசு தின விழா முன்னிட்டு கோட்டக்குப்பம் த.மு.மு.க நகர அலுவலகத்தில் அமைப்பு குழு தலைவர் அப்துல் ரஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் கா.அஸ்கர் அலி தேசிய கொடி ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து ECR சாலையில் அமைந்துள்ள மனிதநேய தொழிற்சங்க (MTS) ஆட்டோ ஸ்டாண்ட் அமைப்புக்குழு உறுப்பினர் A.K. பஷீர் அகமது அவர்கள் கொடியை ஏற்றி வைத்தார்.

நிகழ்வில் கோட்டக்குப்பம் நகர நிர்வாகிகள் ஷபீ பாஷா, (மு) நகர பெருலாளர் முஹம்மது யூசுப் (எ)பைசல், MTS ஆட்டோ ஸ்டாண்ட் தலைவர் கா. செளவுகத் அலி, SMI மாவட்ட துணை செயலாளர் அஸ்லம் பாஷா (MTS) உறுப்பினர்கள் கலிமுல்லா கே. முஹம்மது அலி, (மு) ரஹ்மத் நகர் கிளை தலைவர் அபுல் ஹசன், தமுமுக மமக உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் நகராட்சி நிர்வாகம் அதிரடி: மக்களை அச்சுறுத்திய தெரு நாய்கள் பிடிப்பு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் வாகன நிறுத்தும் வசதி இல்லாத காரணத்தினால் அப்பகுதி மக்கள் தடை கோரி மனு.

டைம்ஸ் குழு

நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய கல்யாணராமன்மனை கண்டித்து கோட்டக்குப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Leave a Comment