22.3 C
கோட்டக்குப்பம்
December 16, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கழிவுநீர் வடிகால் திட்டம் தொடங்கிவைப்பு.

கோட்டக்குப்பம் பழைய பட்டணப்பாதை மற்றும் மகாத்மா காந்தி சாலையை இணைக்கும் பிரதான சாலையான கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன் பகுதியில் நீண்ட காலமாக கழிவு நீர் வாய்க்கால் இல்லாததால் சாலைகளில் கழிவு நீர் தேக்கமாக காணப்பட்ட வந்தது. இதனால், அப்பகுதி வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் என அனைவரும் தேங்கி நிற்கும் கழிவு நீரால் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.

இதற்கு நிரந்தர தீர்வு வேண்டி பலமுறை அப்பகுதி மக்களால் மனு அளிக்கப்பட்டு வந்தது. மேலும், அதிகாரிகளும் இது சம்பந்தமாக பலமுறை ஆய்வு செய்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும், மழை நீர் வடிகாளுடன் கூடிய தரை தள தொட்டி அமைக்கும் பணி இன்று(23/11/2023) துவங்கப்பட்டது. இதன் மூலம் கழிவு நீர் மற்றும் மழை நீர் தேங்காதவாறு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், கோட்டக்குப்பம் நகர மன்ற தலைவர் S.S ஜெயமூர்த்தி, நகராட்சி ஆணையர் புகேந்திரி, 21-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் M. சைதானி முஹமது கவுஸ், நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் வீடு தேடிச் சென்று பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் பூட்டப்பட்டிருக்கும் வணிக வளாகத்தை திறக்கக்கோரி விசிகவினர் ஆர்ப்பாட்டம்!

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் நகராட்சியின் வார்டு மறுவரையரையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை களைய கோரி விழுப்புரம் ஆட்சியரிடம் மனு.

டைம்ஸ் குழு

Leave a Comment