February 4, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

சின்ன கோட்டக்குப்பம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நவதானியங்கள் வழங்கப்பட்டது.

கோட்டக்குப்பம் நகராட்சி, சின்ன கோட்டக்குப்பம் 13-வது மற்றும் 14-வது வார்டு சத்யாநகர் சுப்பிரமணியபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கும் வகையில் 6-வது முறையாக இன்று(11/04/2023) செவ்வாய்க்கிழமை காலை ஏழு கிலோ நவதானியங்கள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.

குழந்தைகளுக்கு மில்க் பிஸ்கெட் தி.மு.க. நகர மாணவரணி அமைப்பாளர் எஸ்.சுகுமார் மற்றும் 15-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் I. ஜாகிர் உசேன் ஆகியோரின் முன்னிலையில் 14-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் M. ஸ்டாலின் சுகுமார் அவர்கள் வழங்கினார்.

மேலும், இதுவரை 60 கிலோ நவதானியங்கள் குழந்தைகளுக்கு இந்த அங்கன்வாடி மையத்தில் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் பேரூராட்சியின் நிர்வாகத்தை கண்டித்து: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் தொடர் மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தத்தால் மக்கள் பெரும் அவதி.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் நகராட்சியாக தரம் உயர்வு. அனைத்துக் கட்சியினர் வரவேற்று கொண்டாட்டம்.

டைம்ஸ் குழு

Leave a Comment