30.2 C
கோட்டக்குப்பம்
June 1, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் உள்ள அங்கன்வாடி பெயர் பலகை எரிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.

கோட்டக்குப்பம் தைக்கால் திடல் பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் 30-க்கும் அதிகமான குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையம் அருகில் மர்ம நபர்கள் இரவில் அடிக்கடி குடிப்பதும், மின்சார வயர்களை திருடுவதும், அங்கன்வாடி சுற்றுச் சுவர்களை நாசம் செய்வதும் என தொடர்கதையாகி வருகிறது.

குறிப்பாக நேற்றிரவு, சமூக விரோதிகள் குழந்தைகள் அங்கன்வாடி மையத்தின் பெயர் பலகையை எரித்துள்ளனர்.

இதனைக் கண்டித்து 18-வது வார்டு கவுன்சிலர் ஃபர்கத் சுல்தானா அவர்கள் கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் அவர்களிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், பொது சொத்தான அங்கன்வாடி மையத்தை தொடர்ந்து சேதப்படுத்தி பெயர்பலகை கொளுத்தி நாசம் செய்து வரும் மர்ம நபர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் தொற்றினால் இறந்தவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டனில் CCTV கண்காணிப்பு கேமரா அமைப்பு: குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் கொரானா கண்டறிய பட்டவர்களில் பலர் சிகிச்சை முடித்து நலமுடன் வீடு திரும்பினார்.

Leave a Comment