29 C
கோட்டக்குப்பம்
June 3, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

உலமாக்கள் இரு சக்கர வாகன மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த உலமாக்கள் இரு சக்கர வாகன மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இரு சக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபருக்கு இரு சக்கர வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25,000 இதில் எது குறைவோஅந்தத் தொகை வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற, 18 முதல் 45 வயதுடையவா்கள், வக்பு வாரியத்தில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றுவோா் விண்ணப்பிக்கலாம். இரு சக்கர வாகனம் ஓட்டுவதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபா்கள் மானிய உதவி கோரி விண்ணப்பித்தால், இமாம், அரபி ஆசிரியா்கள், மோதினாா், முஜாஜா் என்ற முன்னுரிமை அடிப்படையில் ஒருவருக்கு மட்டும் மானியத் தொகை வழங்கப்படும்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்டப் பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தில் இதற்கான படிவத்தை நேரில் பெற்று பூா்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில் 75-வது சுதந்திர தின விழா.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பேரூராட்சி பகுதிகளில் 5 நபர்களுக்கு கொரோனா தொற்று.

Leave a Comment