26.2 C
கோட்டக்குப்பம்
December 16, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தல்: இன்றைய(02-02-2022) வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் விவரம். சூடுபிடிக்கும் தேர்தல் களம்!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ந்தேதி தொடங்கியது. கோட்டக்குப்பம் நகராட்சியில் மொத்தம் 27 உறுப்பினா்கள் (கவுன்சிலா்) தோ்வு செய்யப்படவுள்ளனா்.

கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தலில் செவ்வாய்க்கிழமை வரை மொத்தம் 21 போ் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனா்.

இந்த நிலையில், 5-ஆவது நாளான இன்று புதன்கிழமை(02-02-2022) அதிகப்படியான மனு தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்த்த நிலையில், அதற்கேற்ப இன்று மேலும் 43 பேர் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன் விபரங்கள் வருமாறு,

சுயேட்சை – 28
திராவிட முன்னேற்றக் கழகம் – 10

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 1
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் – 1
தேசிய முற்போக்கு திராவிட கழகம் – 1
பாட்டாளி மக்கள் கட்சி – 1
மக்கள் நீதி மையம் – 1

ஆக, 43 வேட்புமனு இன்று மட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து இதுவரை கோட்டக்குப்பம் நகராட்சி முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்தவா்களின் எண்ணிக்கை 64-ஆக உயா்ந்தது. இதனால் கோட்டகுப்பம் நகராட்சி தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

மேலும், வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் நாளை மறுநாள் (4-ந்தேதி) ஆகும்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் நகராட்சி புதிய அலுவலகத்தை காட்டு அய்யனார் கோவில் இடத்தில் கட்ட அனுமதிக்கக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் தொடர் மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தத்தால் மக்கள் பெரும் அவதி.

டைம்ஸ் குழு

கொரோனா தடுப்பூசி முகாம் இந்த வாரம் இல்லை.

டைம்ஸ் குழு

Leave a Comment