May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கொரோனா கட்டுப்பாடு தொடர்பாக கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் ஆலோசனை.

கொரோனா கட்டுப்பாடு தொடர்பாக கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு. ராபின்சன் அவர்கள் தலைமையில் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கொரோனா தொடர்பான இரவு நேர ஊரடங்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தொழுகை நடத்த பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவை பின்பற்றும் விதமாக, ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் அருகிலுள்ள சௌகத்துல் இஸ்லாம் மதரஸாவில் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளை அழைத்து, கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் அவர்கள் ஊரடங்கு நேரத்தில் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தந்து, அந்த நாட்களில் தொழுகை நடத்தக் கூடாது மற்றும் அவசிய பணியை தவிர வேறு எதற்கும் வெளியே சுற்றித் திரிய வேண்டாம் என்றும், மேலும் மாஸ்க் அணிய வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் அனைத்து பள்ளிவாசல் முத்தவல்லி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பாக “ஆர்சனிக் ஆல்பம் 30” மருந்து வழங்கப்பட்டது.

வார்டு வரையரையை சீராண வாக்காளர்‌ எண்ணிக்கை அடிப்படையில்‌ அமைக்க வேண்டி: இந்திய யூனியன்‌ முஸ்லிம்‌ லீக்‌ கோரிக்கை

டைம்ஸ் குழு

KIWS சார்பாக ஆம்புலன்ஸ் சேவை, மரக்கன்று நடும் விழா மற்றும் இரத்ததான முகாம்..

Leave a Comment