May 10, 2025
Kottakuppam Times
Uncategorized

கோட்டக்குப்பம் நகராட்சி வரைவு வாக்குச் சாவடி பட்டியல்குறித்து இன்று கலந்தாலோசனை

கோட்டக்குப்பம் நகராட்சி வரைவு வாக்குச் சாவடி பட்டியல் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கலந்தாலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன.4) மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான த.மோகன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் நகராட்சிப் பகுதிக்குள்பட்ட வாா்டுகளில் வாக்குச் சாவடிகள் அமைப்பது குறித்து செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெறும்.

இந்தக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளையும், ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம் எனத் ஆட்சியா் மோகன் தெரிவித்தாா்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் செப்.12-இல் கொரோனா மெகா இலவச தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் நகராட்சியை தி.மு.க கைப்பற்றியது

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் நாளை 15-வது மெகா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு

Leave a Comment