May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஜமியத் நகரின் ஒரு பகுதி தனித்துவிடப்பட்டுள்ளதா?

கோட்டக்குப்பம் ஜமியத் நகர் அமிர்தா கார்டன் அருகிலுள்ள பகுதிகளுக்கு சாலை வசதி, கழிவுநீர் வசதி இல்லாத காரணத்தால் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நீர் தேங்கி கிடப்பதால் நோய்கள் பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் அஞ்சுகின்றனர்.

இதனை, கோட்டக்குப்பம் பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆவணம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டகுப்பம் தீனியாத் மக்தப் மதரஸா மாணவர் திறனாய்வு போட்டி..

ஜாமிஆ மஸ்ஜித் ஹாபிழ் மௌலவி S.A. புகாரி மௌலானா அன்வாரி அவர்களின் பெருநாள் வாழ்த்து..

கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் சுமார் 6 மணி நேரத்துக்கு மேல் கொட்டித் தீர்த்த மழை.

டைம்ஸ் குழு

Leave a Comment