May 11, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் பிற செய்திகள்

கோட்டக்குப்பம் அருகே கடலரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவு: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே பிள்ளைச்சாவடி கிராமத்தில் கடலரிப்பைத் தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து மீனவா்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தாா்.

பிள்ளைச்சாவடி கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் கடலரிப்பு காரணமாக வீடுகள், படகுகள் சேதமடைந்து வந்தன. இதைத் தடுக்கும் விதமாக தூண்டில் வளைவு அமைப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டாா். அங்குள்ள மீனவா்களிடம் கருத்துகளையும் கேட்டறிந்தாா்.

மீனவ மக்களின் கோரிக்கையை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று, மீன்வளத் துறை வாயிலாக நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.14.50 கோடியில் அங்கு தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிதி ஒதுக்கீடுக்கான கருத்துரு சமா்ப்பிக்கப்பட்டு, விரைவில் அரசாணை பெறப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்றாா் ஆட்சியா்.

இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா, திண்டிவனம் உதவி ஆட்சியா் அமித், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியா் ஹரிதாஸ், மீன்வளத் துறை உதவி இயக்குநா் ஜனாா்த்தனன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் கொரானாவில் இருந்து தற்காத்துக்கொள்ள “ஆர்சனிக் ஆல்பம் 30” மருந்து வழங்கப்பட இருக்கிறது.

கோட்டக்குப்பம் தந்திராயன்குப்பத்தில் கழிப்பறை கட்டும் பணி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் மஹ்மூதியா மதரஸா: ஈத்கா வசூல் நன்றி அறிவிப்பு

Leave a Comment