22.3 C
கோட்டக்குப்பம்
December 16, 2025
Kottakuppam Times
பிற செய்திகள்

தமிழகத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா.

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 6,472 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 6,472 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ளவர்களில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள் 6,423, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 49 பேர்.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,92,964 ஆக உயர்ந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக வழக்கம்போல் சென்னையில் இன்று 1,336 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய அறிவிப்பில் மேலும் 88 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் பலியானோர் 63 பேர், தனியார் மருத்துவமனையில் பலியானோர் 25 பேர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

3 மாதங்கள் ரேஷன் பொருட்கள் வாங்காதவர்களின் குடும்ப அட்டைகள் ரத்து!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

டைம்ஸ் குழு

உலமாக்கள் நல வாரியத்தில் இஸ்லாமியா்கள் பதிவு செய்யலாம்

டைம்ஸ் குழு

Leave a Comment