28.7 C
கோட்டக்குப்பம்
May 10, 2025
Kottakuppam Times
செய்திகள் பிற செய்திகள்

3 மாதங்கள் ரேஷன் பொருட்கள் வாங்காதவர்களின் குடும்ப அட்டைகள் ரத்து!

மாநில உணவுத்துறை அமைச்சர்கள் மாநாடு மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஸ்வான், மூன்று மாதங்களுக்கு மேல் ரேஷன் பொருள்களை வாங்காத குடும்ப அட்டைதாரர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதன் மூலம், மானிய விலையில் வழங்கப்படும் உணவுப் பொருள்களை வாங்க வேண்டிய அவசியமில்லாதவர்களைக் கண்டறிந்து அவர்களது குடும்ப அட்டைகளை ரத்து செய்ய முடியும் என்றும் பாஸ்வான் குறிப்பிட்டார்.

ரேஷன் கடைகளுக்கு வர இயலாதவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மானிய விலையில் உணவு தானியங்களை விநியோகிக்க வேண்டும் என மாநில அரசுகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக பாஸ்வான் மேலும் தெரிவித்தார்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் புயல் தற்காப்பு நடவடிக்கை பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சிவி சண்முகம்..

கோட்டகுப்பதில் 72-ஆம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது!

‘தானே’ முன் அனுபவ பாடத்தால் எச்சரிக்கையுடன் இருப்போம்?! நம்மை நெருங்கும் ‘நிவர்’ புயல்..

Leave a Comment